• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘சுவாதி கொலை வழக்கு’ திரைப்படத்துக்கு தடை விதிக்க சுவாதியின் தந்தை டிஜிபியிடம் மனு

May 31, 2017 தண்டோரா குழு

‘சுவாதி கொலை வழக்கு’ திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுவாதியின் தந்தை டிஜிபியிடம் மனு அளித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 24 தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைப்பட்ட நிலையில் அவர் மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார். சுவாதி கொலை ராம்குமார் தற்கொலை என இந்த வழக்கில் இன்னும் பல மர்மங்கள் இருந்து வருகிறது.

இந்நிலையில், விஜகாந்தை வைத்து உளவுத்துறை என்ற படத்தை இயக்கிய எஸ்.டி.ராமேஷ் செல்வன் என்பவர் சுவாதி கொலை சம்பவத்தை திரைப்படமாக எடுத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது. இதில் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக புகார் எழுந்தது. அதிலும் ராம்குமார் கழுத்தை போலீசாரே அறுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சுவாதி கொலை வழக்கு திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி டிஜிபியிடம் சுவாதியின் தந்தை சந்தானகோபாலகிருஷ்ணன் மனு கொடுத்துள்ளார்.

அதில், எங்களிடம் அனுமதி வாங்காமல் படத்தை எடுத்துள்ளனர். உண்மைக்கு புறம்பான விஷயங்கள் உள்ளன. படத்தை வெளியிட்டால் எங்கள் குடும்பத்திற்கு மேலும் மனவருத்தம் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க