• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுரங்கப்பாதை மெட்ரோ ரயிலில் செல்போன் சிக்னல் கிடைக்காது

May 13, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் நாளை தொடங்கவுள்ள முதல் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவையில் செல்போன் சிக்னல் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து பரங்கிமலை வரையும், சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தற்போது செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்கவழி மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் தொடங்குகிறது. எட்டு கி.மீட்டர் தொலைவுக்கு இந்த சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மெட்ரோ ரயில், சுரங்க வழி பாதையில் செல்வதால், ரயில் பயணத்தின்போது செல்போன் சிக்னல் கிடைக்க வாய்ப்புகள் இல்லை எனவும், விரைவில் சுரங்கபாதை ரயில் நிலையங்களில் செல்போன் சிக்னல் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் எனவும், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க