• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 114 வது பிறந்த நாள்

October 4, 2017 தண்டோரா குழு

திருப்பூரில் சுதந்திரப் போராட்ட தியாகி குமரனின் 114 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தியாகி குமரனின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருப்பூரில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி குமரனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் தியாகி குமரனின் 114 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ரயில் நிலையம் அருகில் உள்ள தியாகி குமரன் நினைவிடத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி,நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா,மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னலாடை துறை அமைப்புகளின் சார்பில் நொய்யல் ஆற்றை சுத்தம் செய்யும் பணியினை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் படிக்க