• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுதந்திர தினம் வருவதையொட்டி கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

August 13, 2021 தண்டோரா குழு

நாடு முழுவதும் வரும் (15ம் தேதி) சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தன்று அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதைத் தவிர்க்க மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்போது இருந்தே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக ரயில்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கோவை ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் முழுமையாக சோதனை செய்யப்படுகிறார்கள். 24 மணி நேரமும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து பயணிகள் கொண்டு வரும் உடமைகளும் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகின்றன. ரயில் நிலைய நுழைவு வாயில் வழியாக மட்டுமே பயணிகள் வரவேண்டும் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க