• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘சுகாதாரத் துறை அமைச்சர், கொலை குற்றவாளி அமைச்சர்’ – மு.க ஸ்டாலின்

June 28, 2017 தண்டோரா குழு

உயிரை காப்பாற்ற வேண்டிய சுகாதாரத் துறை அமைச்சர், கொலை குற்றவாளி அமைச்சராக உள்ளார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தலைமை செயலருக்கு வருமான வரித்துறை எழுதியுள்ள கடிதம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தி.மு.க.,கோரிக்கை விடுத்தனர். இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்துவிட்டார். இதனை கண்டித்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது;

“தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தலைமை செயலருக்கு வருமான வரித்துறை கடிதம் எழுதியுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களில், யார் யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரன், தீயணைப்பு துறை டி.ஜி.பி. ஜார்ஜ் பெயர் இடம் பெற்றுள்ளது.

இவர்களுக்கு ரூ.40 கோடி லஞ்ச பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வருமான வரித்துறை சார்பில், தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், 10 மாதமாகியும், இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. ஆர்கே நகர் இடைத்தேர்தல் சோதனையின் போதும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இடம்பெற்றவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

குட்கா நிறுவனம் சார்பில், போலீஸ் கமிஷனருக்கு தீபாவளி மாமூல் ரூ.15 லட்சம், கிறிஸ்துமஸ் மாமூல் ரூ.14 லட்சம் கொடுக்கப்பட்டது. இது குறித்து சட்டப்பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்தும்,சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை.

சுகாதார அமைச்சர், மக்கள் உடல் நலன் சார்ந்த பிரச்னையில் துரோகம் செய்துள்ளார். உயிரை காப்பாற்ற வேண்டிய அமைச்சர் கொலை குற்றவாளி அமைச்சராக உள்ளார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்

மேலும் படிக்க