February 18, 2019
தண்டோரா குழு
கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் நடந்த பிரசவம் பலருக்கு ஆச்சரியமான செய்தியாக அமைந்துள்ளது.
கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் அமைந்துள்ள மருத்துவமனையில் இளம் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட 25 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 ஆண், 1 பெண் என்று 7 குழந்தைகள் பிறந்துள்ளன. புதிதாக பிறந்த குழந்தைகள் அனைத்தும் தனித்தனியாக மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தற்போது அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளன. பிரசவமான பெண்ணுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர்.
இது குறித்து அப்பெண்ணின் கணவர் கூறுகையில்,
எங்களுக்கு மொத்தம் 10 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும். இதனால் இனியும் குழந்தை பெறும் எண்ணம் இல்லை.
ஓராண்டிற்கு முன், லெபனான் நாட்டின் செயிண்ட் ஜார்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரு பெண்ணிற்கு 6 குழந்தைகள் பிறந்தது. ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் என்பது உலகில் இது இரண்டாவது முறையாகும். உலகில் முதல் முறையாக 1997ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.