தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சீமைக்கருவேல மரங்கள் வெட்டுவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,
தமிழக அரசு ஒரு நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளது. தமிழ்நாடு வனத்துறை தலைமை பாதுகாவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழு சீமைக்கருவேல மரங்கள் பாதிப்பு குறித்து அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யும் என்றும், இந்தக் குழுவில் வேளாண்பல்கலை பேராசிரியர், கால்நடை பல்கலை பேராசிரியர், சட்ட, வேளாண்துறை அதிகாரிகள் உட்பட 7 பேர் உறுப்பினராக உள்ளனர். மேலும் இந்த குழு 3 மாதத்தில் அறிக்கை அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “தமிழக அரசு, நிபுணர்கள் குழு அமைத்தால், அந்த குழுவில் எங்கள் தரப்பில் 4 நிபுணர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,இந்த வழக்கு விசாரணையை ஜூலை மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.அதுவரை, தமிழகத்தில் சீமை கருவேலம் மரத்தை அகற்ற விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கும் என்று உத்தரவிட்டனர்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது