• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சீனாவில் தேசிய மருத்துவர்களுக்கான தகுதி தேர்வில் ரோபோ வெற்றி

November 8, 2017 தண்டோரா குழு

சீனாவில் நடந்த மருத்துவருக்கான தேசிய அளவிலான தகுதி தேர்வில் கலந்துக்கொண்ட ‘ரோபோ’ வெற்றி பெற்றுள்ளது.

சீனாவில் மருத்துவர்களுக்கான தேசிய அளவு தகுதி தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. அந்த தேர்வில் சுமார் 53௦,௦௦௦ பேர் கலந்துக்கொண்டனர்.

சீனாவின் சிங்க்ஹுவா பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான ‘ஐபிளைடெக்’ நிறுவனம் இணைந்து ‘ரோபோ’ ஒன்றை தயாரித்தனர். அவர்கள் தயாரித்த ரோபோவும் மருத்துவர் தகுதி தேர்வில் கலந்துக்கொண்டது.

தேர்வின் மேற்பார்வையாளர் கண்காணிப்பில், அந்த ரோபோவிற்க்கு நியமிக்கப்பட்ட அறையில் இணையத்தள உதவியோ அல்லது சிக்னல் உதவியோ இல்லாமல், அந்த தேர்வுக்கு வந்திருந்த மற்றவர்களுடன், அந்த ரோபோ தேர்வு எழுதியது. தேர்வில் ஏமாற்று வேலை ஏதும் நடக்காமல் இருக்க, அந்த தேர்வு கேமராவில் பதிவு செய்யப்பட்டது.

சீனாவின் தேசிய மருத்துவ பரிசோதனை மையம், அந்த தேர்வின் முடிவுகளை நேற்று(நவம்பர் 7) வெளியிட்டது. அதில் அந்த ரோபோ 456 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற்றுள்ளது.

மேலும் படிக்க