• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது

May 24, 2017 தண்டோரா குழு

சி.பி.எஸ்.இ பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்றழைக்கபடும் சி.பி.எஸ்.இ பாட திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ஏதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் மதிப்பெண் பிரச்சனை காரணமாக இன்று தேர்வு முடிவுகள் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ வழியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கும் முடிவை ரத்து செய்வதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது.இதனை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதிகள் கீதா மிட்டல், பிரதிபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இவ்விசாரணையின் போது பொது தேர்வில் தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும், இந்த நடைமுறையை இந்த ஆண்டு முதலே அமல்படுத்த வேண்டும் என்று சி.பி.எஸ்.இ-க்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக சிபிஎஸ்இ ஆலோசனைக்கூட்டம் இன்று நடத்துகிறது. மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜுன் முதல் வாரத்தில் வெளியாகலாம் என ஏதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க