April 22, 2021 தண்டோரா குழு
கோவையில்,சி.எஸ்.ஐ.ஆலய ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தொகை 25 கோடி ரூபாய் மோசடி செய்ததாக,பேராயர் திமோத்தி ரவீந்தர்,முன்னாள் செயலாளர் சார்லஸ் உட்பட நான்கு பேர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
கோவை வெள்ளலூரில் உள்ள சி.எஸ்.ஐ., சர்ச்சில்,பாதிரியாராக இருப்பவர் ஜெர்சோம் ஜேக்கப், இவர் கோவை குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில், கடந்த,2005 முதல், கோவை மண்டல சி.எஸ்.ஐ., ஆலய நிர்வாகத்தின் கீழ் தாம் பணியாற்றி வருவதாகவும்,தமது வருங்கால வைப்பு நிதி தொகையை,சி.எஸ்.ஐ., அலுவலகத்திற்கு தொடர்ந்து செலுத்தி வந்த நிலையில், வருங்கால வைப்பு கணக்கு குறித்து,கேட்டபோது, சி.எஸ்.ஐ., அலுவலக தரப்பில் இருந்து சரியான விவரங்கள் தமக்கு தரப்பபடவில்லை எனவும்,மேலும் மண்டலத்திற்கு உட்பட்ட,125 சர்ச்சுகளில் பணிபுரிந்து வரும், என்னைப் போன்ற பலரது வருங்கால வைப்பு நிதியான,சுமார், 25 கோடி ரூபாய்க்கு மேல்,கணக்கில் காட்டப்படமால் மோசடி செய்துள்ளதாக அவர் புகார் அளித்திருந்தார்.
இவரது புகாரின் பேரில்,பிஷப் திமோத்தி ரவீந்தர்,முன்னாள் செயலாளர் சார்லஸ், ஆலோசகர் மங்கள் தாஸ்,பொருளாளர் செல்வகுமார் ஆகிய நால்வர் மீது, கூட்டு சதி நம்பிக்கை மோசடி, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை மண்டலத்திற்கு உட்பட்ட சி.எஸ்.ஐ. ஆலயம் தொடர்பான 25 கோடிக்கு மேல் மோசடி வழக்கு குறித்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.