• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சி.ஆர்.ஐ. டிரஸ்ட் சார்பில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை விரைவில் துவக்கம்

May 20, 2021 தண்டோரா குழு

கோவை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் மற்றும் சி.ஆர்.ஐ. அறக்கட்டளை சார்பாக கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதிகொண்ட 100 படுக்கைகளுடன் கூடிய புதிய சி.ஆர்.ஐ. டிரஸ்ட் மருத்துவமனையை வரும் வாரத்தில் செயல்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது.

இதற்காக சுமார் 3 கோடி மதிப்பீட்டில் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் C.R.I. Pumps நிறுவனத்தின் கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு அலுவலகத்தை கோவிட் சிகிச்சை மருத்துவமனையாக முற்றிலும் மாற்றி அமைத்து சேவை செய்ய உள்ளது. இங்கு தகுதிவாய்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கொண்டு தரமான முறையில் சிகிச்சை அளிக்க உள்ளது. இந்த C.R.I. அறக்கட்டளை மருத்துவமனை, கொரோனா சிகிச்சையை எந்தவித லாப நோக்கமும் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் செயல்பட உள்ளது.

அரசின் கொரோனாவை கட்டுப்படுத்தும் அதி தீவிர நடவடிக்கைகளுக்கு, இந்த எங்களது பங்களிப்பு உறுதுணையாக அமையும் என நம்புகிறோம்.இந்த திட்டம் குறித்த கடிதத்தை சி.ஆர்.ஐ. நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் சி.ஆர்.ஐ. அறக்கட்டளையின் அறங்காவலர்கலான G. சௌந்தரராஜன், மற்றும் G. செல்வராஜ் ஆகியோர் தமிழக முதலமைச்சரிடம் சமர்பித்தனர்.

சி.ஆர்.ஐ. நிறுவனம் சமூக நலனுக்காக பல ஆண்டுகளாக, தமிழ்நாடு அரசுடன் இணைந்து பல அரசு பள்ளிகளை தத்தெடுப்பது, விவசாய பல்கலைக்கழகத்துடன் இணைந்து சிறந்த வேளாண்மைச் செம்மல் விருது வழங்குதல், மேலும் குறைந்த செலவில் தரமான மருத்துவத்தையும் வழங்கிவருகிறது.

மேலும் படிக்க