• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிலிண்டருக்கான மானியம் அடுத்த ஆண்டு மார்ச் முதல் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு

July 31, 2017 தண்டோரா குழு

சமையல் காஸ் சிலிண்டருக்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 18 கோடியே 11 லட்சம் பேர் மானிய விலையில் சிலிண்டர் பெற்று வருகின்றனர்.ஆண்டுதோறும் மானிய விலையில், 12 சிலிண்டர்களை பெற முடியும். அதன் பிறகு சந்தை விலையில் சிலிண்டர்களை பெறலாம்.கடந்த 2015-ல் சிலண்டருக்கு ரூ.366-ஆக இருந்த மானியம் தற்போது ரூ.125-ஆக குறைந்துள்ளது.

இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளோ அல்லது மார்ச் 31-க்கு பிறகோ ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையை மாதந்தோறும் ரூ.4 வீதம் உயர்த்திக் கொள்ளவும் எண்எணய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் லோக்சபாவில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில்,

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சமையல் காஸ் விலையில், வாட் வரி சேர்க்காமல், சிலிண்டருக்கு இரண்டு ரூபாய் மாதம் தோறும் உயர்த்த, கடந்த ஆண்டு ஜூலை, 1ம் தேதி முதல் உயர்த்த உத்தரவிடப்பட்டது. அதன் பின் 10 முறை காஸ் விலையை நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

கடந்த மே, 30ம் தேதி பிறப்பித்த மத்திய அரசின் உத்தரவின் மூலம், மத்திய அரசு அளித்து வரும் மானிய தொகை முழுவதுமாக நீக்கும் வரை மாதம் தோறும் சிலிண்டர் விலையில், நான்கு ரூபாய் உயர்த்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை, ஜூன், 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் வரை அமலில் இருக்கும் எனக் கூறியுள்ளார்.கடந்த 5 மாதங்களில் சமையல் சிலிண்டரின் விலை இதுவரை ரூ.32 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க