May 1, 2019
சிறுவாணி அருகே காட்டு யானை தாக்கியதில் 65 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
காருண்யா நகரைச் சேர்ந்தவர் எஸ். சின்னமணி (65) என்ற மூதாட்டி வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு மின்சாரம் தடைபட்டதால், புழுக்கம் தாங்காமல் வீட்டின் வெளியே சின்னமணி படுத்திருந்தார். அப்போது, சுமார் 2.30 மணியளவில் அவரது வீட்டின் பக்கம் வந்த யானை சின்னமணியை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே, உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு கோவை மாவட்ட வனத்துறையின் சார்பில் ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்பட்டது.