• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுத்தை பிடிபட்டால் கோவை வனச்சரகத்தில் விடப்படும் – கோவை மண்டல வனக்காப்பாளர்

January 18, 2022 தண்டோரா குழு

சிறுத்தை பிடிபட்டால் கோவை வனச்சரகத்தில் விடப்படும் கோவை மண்டல வனக்காப்பாளர் ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் உள்ள தன்னாசி ஆண்டவர் கோயில், கோலமாவு மலைப்பகுதியில் கடந்த நவம்பர் மாதம் முதல் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை புலி ஒன்றின் நடமாட்டம் இருந்து வந்தது.இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் சிறுத்தை புலியை பிடிக்க 3 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் குடோனில் சிறுத்தை இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடோன் ஊழியர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, வனத்துறையினர் வந்து குடோன் முழுவதும் இருந்த ஓடுகளில் வலை விரித்தனர். வெளியே செல்ல உள்ள 2 வழிகளிலும் வனத்துறையினர் சிறுத்தை புலியை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர்.

கூண்டில் இறைச்சி வைக்கப்பட்டு அதனை சுற்றியும் வலை அமைக்கப்பட்டள்ளது. கால்நடை மருத்துவர் குழுவினர் வந்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க முடியுமா என ஆய்வு செய்தபோது அதில் சிக்கல் இருப்பது தெரிய வந்ததால், சிறுத்தை தானாக கூண்டில் சிக்கும் வரை காத்திருக்க முடிவு செய்துள்ளனர். சிறுத்தை புலியின் நடவடிக்கைகளை கண்காணிக்க கூண்டுகளுக்கு அருகிலேயே இரவுநேர கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கேமராவில் இன்று அதிகாலை சிறுத்தை புலி கூண்டை நோக்கி நெருங்கி வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகளை தற்போது வனத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.இந்நிலையில் கோவை மண்டல வனக்காப்பாளர் ராமசுப்பிரமணியம் சிறுத்தை புலி பதுங்கி உள்ள கூட உன்னை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்,

தற்போது குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தை புலி ஏற்கனவே குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்து நாய்களை வேட்டையாடியது என்பதை வனக்கால்நடை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளதாகவும், இது 3 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை புலியாக இருக்கக் கூடும் எனவும் தெரிவித்தார். இன்று இரவுக்குள் கூண்டில் சிறுத்தை பிடிபடும் என நம்பிக்கை தெரிவித்த அவர், பாழடைந்த குடோனில் பதுங்கி உள்ளதால் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் சிக்கல் உள்ளது எனவும், அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் திட்டம் இல்லை எனவும் தெரிவித்தார்.

சிறுத்தை புலி பிடிபட்ட பிறகு அதன் உடல் நலத்தை கண்காணித்து பின்னர் அதனை, கோவை மாவட்டத்தில் உள்ள அடர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட முடிவு செய்துள்ளதாகவும் கோவை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் தெரிவித்தார்.

மேலும் படிக்க