• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிபிஎஸ்இ வினாத்தாள் லீக் ஆனது தொடர்பாக 9 சிறுவர்கள் கைது

March 31, 2018 தண்டோரா குழு

சிபிஎஸ்இ வினாத்தாள் லீக் ஆனது தொடர்பாக 9 சிறுவர்கள் மற்றும் பயிற்சி மைய உரிமையாளர் உள்பட 12 பேர் ஜார்க்கண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மார்ச் 5-ம் தேதி சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தொடங்கியது. இதற்கிடையில்,தலைநகர் டெல்லியில் வாட்ஸ்அப் மூலம் ஒரு சில பாடங்களுக்கான வினாத்தாள்கள் இணையதளங்களில் வெளியானதாக குற்றச்சாட்டு எழும்பியது.இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல 10ம் வகுப்பு கணித பாட வினாத்தாளும் வட மாநிலங்களில் வெளியானதாக கூறப்பட்டது.இதனையடுத்து,இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியிருந்தார்.

இந்நிலையில்,சிபிஎஸ்இ வினாத்தாள் லீக் ஆனது தொடர்பாக 9 சிறுவர்கள் மற்றும் பயிற்சி மைய உரிமையாளர் உள்பட 12 பேர் ஜார்க்கண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க