• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சின்ன சுடுகாடு பகுதி கழிவுநீர் உந்து நிலையத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

July 5, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் தூய்மை பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 91வது வார்டுக்குட்பட்ட குளத்துப்பாளையம் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் மாநகராட்சி கமிஷனர் தூய்மை பணியாளர்களிடம், அனைவரும் நேரம் தவறாமல் பணிக்கு வருகை தர வேண்டும்.

தூய்மையான மாநகராட்சியாக திகழ தங்களுடைய பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து கோவை புதூர் ஜாமியா நகர் பகுதியில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தார்சாலையை பார்வையிட்ட அவர் அதன் தரத்தினை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் முல்லை நகர் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் அமைக்கப்பட்ட நீருந்து நிலையத்தை பார்வையிட்டார்.

அப்போது குனியமுத்தூர் பகுதியில் 7 வார்டுகளுக்கும் மற்றும் குறிச்சியில் 7 வார்டு பகுதிகளுக்கு நீருந்து நிலையம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பணிகளை ஆய்வு செய்தார். அதேபோல் குனியமுத்தூர் அம்மன் கோவில் சாலை சின்ன சுடுகாடு பகுதியில் உள்ள பிரதான கழிவுநீர் உந்து நிலையத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாநகர பொறியாளர் லட்சுமணன், தெற்கு மண்டல உதவி கமிஷனர் சரவணன், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க