• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சின்னவேடம்பட்டி வார்டு அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

April 13, 2021 தண்டோரா குழு

கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 27 வது வார்டு பகுதி தூய்மை பணியாளர்கள் மாநகராட்சிக்குட்பட்ட சின்னவேடம்பட்டி வார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சியில் 3000த்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் டெங்கு ஒழிப்பு பணி, தூய்மை பணி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 27 வது வார்டு பகுதியில் பணிபுரியும் 40க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளம் இன்னமும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து சம்பளத்தை உடனே வழங்க கோரி சின்னவேடம்பட்டியில் உள்ள வார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க