• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

December 10, 2020 தண்டோரா குழு

நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் சித்ரா. பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள இவர், சரவணன் மீனாட்சி என்ற தொடரில்முல்லை என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமடைந்தார்.கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் ஜனவரி மாதத்தில் திருமணம் நடைபெறவிருந்தது.

இதற்கிடையில், சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த நடிகை சித்ரா, நேற்று அதிகாலையில் தற்கொலை செய்துகொண்டார்.சித்ராவின் மறைவு செய்தி கேட்ட ரசிகர்களும் திரை நட்சத்திரங்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கூறாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்
நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சித்ராவினது கன்னத்தின் தாடைப்பகுதியில் இருந்த காயங்கள் எதனால் ஏற்பட்டது. அவரது நகக்கீரலா,அல்லது வேறு ஒருவரால் ஏற்படுத்தப்பட்டதா என்பது பிரேதப்பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு தெரியவரும்.

மேலும் படிக்க