February 4, 2019
தண்டோரா குழு
தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் சின்னத்தம்பி யானை பாதுக்கவும் அதை அதன் வாழ்விடத்தில் சேர்க்க வலியுறுத்தி இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் சின்னத்தம்பி பாதுகாப்பு குழு சார்பாக சின்னத்தம்பியானை படத்துடன் சூழல் ஆர்வலர்கள் மனு அளித்தனர்.
இது குறித்து சின்னத்தம்பி பாதுகாப்பு குழு ஒருகிணைப்பாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் கூறுகையில்,
கோவை மாவட்ட வன பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கணிமவள கொள்ளையர்கள் மீது சட்ட பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் காடு செழிக்க யானைகள் அவசியம் அதன் வாழவிடம் பாதுக்கபடவேண்டும் அந்த வகையில் மனிதர்களை தொந்தரவு செய்யாத சின்னத்தம்பி யானையினை மறுபடியும் அதன் குடும்பத்துடன் சேர்க்கவேண்டும். அதனால் குமிக்கி யானையாக மாற்ற கூடாது என்பதை வலியுறுத்தி இன்று மனு அளிக்கிறோம்.
மேலும் அவசர வழக்காக இதை விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.மலைகள் முதல் மனிதர்கள் வாழ்வுக்கு யானைகள் ஆதரம் போன்ற வாசகங்களுடன் மனு அளிக்கவந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.