• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சினிமா டிக்கெட் விலையை உயர்த்த தமிழக அரசு அனுமதி

October 7, 2017 தண்டோரா குழு

சினிமா டிக்கெட் கட்டணத்தை 25 சதவிகிதம் வரை உயர்த்திக்கொள்ள திரையரங்கு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழ் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் 10% கேளிக்கை வரி விதித்து கடந்த மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தமிழக அரசின் கூடுதல் கேளிக்கை வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்டோபர் 6-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து கூட்டாக அறிவித்தன.

இந்நிலையில் திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, சினிமா கட்டணத்தை உயர்த்திக்கொள்ள திரையரங்கு உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் ரூ.160 வரையும், மற்ற இடங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் ரூ.140 வரை வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும்,இந்த புதிய டிக்கெட் விலை கட்டணம் வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் படிக்க