• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிசுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி

October 25, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் வயிற்றிலிருந்த குழந்தை சீக்கிரம் வெளியே வரவேண்டும் என்பதற்காக, அந்த குழந்தைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தை சேர்ந்த கெலி பே, அங்குள்ள நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். அவர் மூன்றாவது முறையாக கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான அவரை அங்கிருந்த மருத்துவமனையில் கடந்த 16ம் தேதி அவருடைய கணவர் சேர்த்தார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இன்னும் சிறிது நேரத்தில் தனக்கு குழந்தை பிறந்துவிடும் என்று ஆவலோடு இருந்தார் கெலி. ஆனால்,அவருக்கு ஏற்பட்ட பிரசவ வலி நின்றுவிட்டது. அதன் பிறகு தனக்கு பிரசவ வலி வரும் என்று காத்திருந்தார்.சில நேரம் காத்திருந்த அவர் சோர்வடைய தொடங்கினர்.

உடனே தன்னுடன் பணியாற்றி வரும் லின் டேவிஸ் என்னும் நீதிபதியை தொடர்புக்கொண்டு, தன் வயிற்றிலிருக்கும் குழந்தை சீக்கிரம் வெளியே வரவேண்டும் என்று நோட்டீஸ் ஒன்றை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவருடைய கோரிக்கை ஏற்றுக்கொண்ட லின், நோட்டீஸை ஒன்றை அனுப்பினார்.

நீதிமன்றத்தில் இருந்து வந்த நோட்டீசை, தனது வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு படித்து காண்பித்தார் கெலி பே. சுமார் 12 மணிநேரம் கழித்து அந்த குழந்தை வெளியே வந்தது. அந்த குழந்தைக்கு கிரேத்செல் கொன்னி ஹான்சென் என்று பெயர் சூடப்பட்டது. கெலி பே மற்றும் அவருடைய குழந்தை நலமாக உள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க