• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிங்காநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பில் 3 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்

October 2, 2021 தண்டோரா குழு

சிங்காநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பில் 3 வீடுகள் இடிந்து விழுந்து சேதமானது.

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே 50 ஆண்டுகள் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். கட்டிடங்கள் பழுதடைந்ததால், அங்கு வசித்து வந்த குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்டனர். சில குடும்பத்தினர் அங்கேயே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பழுதடைந்த 3 வீடுகளின் மேற்கூரை, பால்கனி மற்றும் முன்புற சுவர் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.மக்கள் குடி இல்லாத வீடுகள் இடிந்து விழுந்ததால், யாருக்கும் எந்த பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படவில்லை.

எனவே, பேராபத்து ஏற்படும் முன்பு விரைந்து பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்பை இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க