• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் இருந்து கர்நாடக சென்ற தொழிலதிபர்

April 22, 2020 தண்டோரா குழு

ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை விமான நிலையத்திலிருந்து கர்நாடாக மாநிலம் மங்களூருக்கு மேல் சிகிச்சைக்காக கர்நாடக தொழிலதிபர் அழைத்து செல்லப்பட்டார்.

கோவை தனியார் மருத்துவமனையில் இரு மாதங்களாக வாத நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடகவைச் சேர்ந்த தொழிலதிபர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக செல்ல முடியாமல் இருந்துள்ளார்.இந்நிலையில் மத்திய அரசு மூன்று நாட்களுக்கு முன்பு அவசர சிகிச்சைககாக நோயாளிகளை ஏர் ஆம்புலென்ஸ் மூலம் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று கொண்டு செல்லலாம் என ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தொழிலதிபர் சார்பில் மாவட்ட ஆசியருக்கு ஏர் ஆம்புலென்ஸ் சேவையை பயன்படுத்த அனுமதி வேண்டி மனு கொடுத்தனர்.நோயாளின் மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் அவரது மேல் சிகிச்சைகாக ஏர் ஆம்புலென்ஸ் மூலம் மங்களூர் செல்வதற்கு கோவை மாவட்ட ஆட்சியர் கு ராசாமணி அனுமதி அளித்தார். இதனையடுத்து நேற்று மாலை டெல்லியிலிருந்து வந்த ஏர் ஆம்புலென்ஸ் , கோவை விமான நிலையத்தில் இருந்து மங்களுக்கு தொழிலதிபர் அழைத்துச் செல்லப்பட்டார்.கொரோனா தொற்று காலத்தில் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் தமிழகத்தில் முதல் முறையாக கோவையிலிருந்து பயன்படுத்தபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க