September 22, 2020 தண்டோரா குழு
கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சிஐடியூ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பாக கொரோனா காலத்தில் வாகன கடன் வட்டி கூட்டு வட்டி ஓராண்டு காலத்திற்கு தள்ளுபடி செய்யவும் ஆர்டிஓ அலுவலகத்தில் வாகன சம்பந்தமான பணிகள் ஓட்டுனர் உரிமை சம்பந்தமான பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்க கோரியும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்கும் நலவாரிய பதிவுச் சான்று உடனே வழங்கவும் ஓட்டுநரான நிவாரணமாக 7500 வழங்கவும் வாகன சோதனை பெயரில் வழிப்பறி கொள்ளை நடத்தும் காவல்துறையை கண்டித்தும் பொய் வழக்குகளை போடுவதைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.