• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சார்ஜாவில் இருந்து கோவை வந்த சிறப்பு விமானம் – 171 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

July 13, 2020 தண்டோரா குழு

சார்ஜாவிலிருந்து கோவைக்கு சிறப்பு விமானத்தில் வந்த 171 பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா ஊரடங்கால் பிற நாடுகளுக்கு பணிக்கு சென்ற சிக்கியுள்ள இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா திரும்பி வருகின்றனர். சென்னையில் கடுமையான ஊரடங்கு அமலில் உள்ளதால் சென்னை வரும் சில விமானங்கள் கோவை விமானத்திற்கு தரையிரக்கப்பட்டு, பயணிகள் கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் சார்ஜாவில் இருந்து 171 இந்தியர்களுடன் புறப்பட்ட சிறப்பு விமானம் நேற்று இரவு 9.30 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தது. இதையடுத்து விமான நிலையத்திலிருந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் 5 குழந்தைகள் உட்பட அனைவருக்கும் கரோனா பரிசோதனைக்கு சளி மாதிரிகளை சேகரித்தனர்.இதையடுத்து அனைத்து பயணிகளும் அருகே உள்ள விடுதிகளில் ஒரு நாள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். நாளை பரிசோதனை முடிவுகள் வெளியான பின் பயணிகள் சொந்த ஊருக்கு சென்று 14 நாள் தனிமைபடுத்திக்கொள்வர்.

மேலும் படிக்க