February 12, 2021 தண்டோரா குழு
கோவை சாய்பாபா காலனியில் உள்ள கனரா வங்கி கிளையின் மூலம்குறுந்தொழில் முனைவோர்களுக்கு முத்திரா கடன் திட்டத்தின் கீழ்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கனரா வங்கியின் கோவை மண்டல உதவி பொதுமேலாளர் ரமேஷ் முதல் கட்டமாக 10 தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று குறுந்தொழில் முனைவோர்களுக்கு முத்திரா கடன் திட்டத்தில் கடன் வழங்கிட உதவி செய்த கிளை மேலாளர்க்கும், மண்டல துணை பொது மேலாளர்க்கும் டாக்ட் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் நன்றி கூறினார்.
பின்னர் டாக்ட் மாவட்ட தலைவர் பேசுகையில்,
‘‘கோவையில் குறுந்தொழில் முனைவோர்கள், கொரோனா காலம் துவங்கி இன்று வரை கடும் நெருக்கடியில் இருந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் மாவட்ட கலெக்டர் மூலம் 410 கடன் கோரும் விண்ணப்பம் கொடுத்ததில், சாய்பாபா காலணி கனரா வங்கி கிளையின் மூலம் மட்டும் 10 தொழில் முனைவோர்களுக்கு இதுவரை 20 லட்சம் வரை முத்திரா கடன் திட்டத்தின் கீழ் வழங்கி உள்ளது. இது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோல் கோவையில் உள்ள அனைத்து வங்கிகளும் குறுந்தொழில்
முனைவோர்களுக்கு முத்திரா கடன் திட்டத்தின் கீழ் முதலீட்டு கடன் வழங்கிட வேண்டும்,‘‘ என்றார்.