• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாய்ந்து விழும் நிலையில் இருந்த 5 மின் கம்பங்கள் உடனடியாக மாற்றம்

December 22, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி 26வது வார்டுக்குட்பட்ட கருப்பண்ண கவுண்டர் லேஅவுட், செங்காளியப்பன் நகர் பகுதிகளில் ஐந்து மின்கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் இருந்தது. இது குறித்து மின்சாரத்துறை அலுவலகத்திற்கு மின் கம்பத்துடன் புகைப்படம் மற்றும் சீரமைத்து தர கோரிக்கை கடிதம் கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரியால் வழங்கப்பட்டது.

இதனிடையே கோரிக்கை விடுக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் புதிய மின் கம்பங்களை மின்சார ஊழியர்கள் மாற்றி கொடுத்துள்ளனர். பீளமேடு தண்ணீர் பந்தல் மின்சாரத் துறையைச் சார்ந்த ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் படிக்க