• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சான்றிதழ்களில் தாயின் பெயரை பயன்படுத்திக் கொள்ள சட்டம் இயற்ற வேண்டும் – மேனகா காந்தி

April 19, 2017 தண்டோரா குழு

குழந்தைகளின் பள்ளி மற்றும் சாதி சான்றிதழ்களில் தந்தையின் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாக்கிழமை பேசியதாவது;

விதவை பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் நிலையை உணர்ந்து, அவர்களது குழந்தையின் பள்ளி மற்றும் சாதி சான்றிதழில் தந்தையின் பெயர் கட்டாயம் இருக்கவேண்டும் என்ற சட்டத்தை தடை செய்ய வேண்டும்.

தந்தையின் பெயர் இல்லாத காரணத்தால் தங்கள் பிள்ளைகளுக்கு பள்ளி சான்றிதழ் வாங்க முடியவில்லை என்று கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கணவனை பிரிந்த பெண்கள் என்னை சந்தித்து, தங்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

கல்வி சான்றிதழ்களில் தந்தை இல்லாத குழந்தைகளுக்கு தந்தையின் பெயருக்கு பதில் தாயின் பெயரை எழுதும் சட்டத்தை அமல்படுத்த கோரி மனித வள மேம்பாடு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவேத்கருக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க