• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சவூதியில் 11 இளவரசர்கள் கைது

November 6, 2017 தண்டோரா குழு

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், அரச குடும்பத்தை சேர்ந்த 11 இளவரசர்கள் மற்றும் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் ஆகியோரை கைது செய்ய அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

சவூதி அரேபியாவில், முகம்மது பின் சல்மான் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பிறகு, அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.இந்நிலையில், இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையிலான புதிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் நிறுவப்பட்டது.

கடந்த 2009 ஆம் ஆண்டு, சவூதி அரேபியாவின் ஜெட்டாவிலுள்ள சிவப்பு கடல் நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அது குறித்து, புதிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், இளவரசர்கள், நான்கு தற்போதைய அமைச்சர்கள் மற்றும் பல முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர். அதோடு,இதையடுத்து, உலக முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் கைது செய்யப்பட்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

“அரபு நாட்டின் உயர் பதவியில் இருக்கும் அமைச்சர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி ஜெட்டாவிலுள்ள தனியார் ஜெட் விமானங்களை பாதுகாப்பு படைகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் படிக்க