• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சவூதியில் விளையாட்டு மைதானத்தில் பெண்கள் நுழைய அனுமதி

October 30, 2017 தண்டோராகுழு

சவுதி அரேபியாவிலுள்ள விளையாட்டு மைதானத்திற்குள் முதல்முறையாக பெண்கள் நுழைய அனுமதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியா நாட்டில், பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படிருந்தது.அந்த நாட்டில் பெண்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால், ஆண்கள் துணை மிகவும் அவசியம். பாலியல் பிரிவினை குறித்த கடுமையான விதிகள் இருந்ததால், அதைபோல் விளையாட்டு அரங்கங்களுக்கு செல்ல பெண்களுக்கு நீண்டகாலமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், தற்போது சவூதி அரேபியா அரசு,பல நவீன பொருளாதார திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவும் என்று கருதப்படுகிறது. அவ்வகையில், தற்போது அந்த நாட்டின் பெண்களுக்கு பல சலுகைகளை மன்னர் சல்மான் அறிவித்து வருகிறார். இதனால் சவூதி அரேபியா நாட்டின் பழமைவாத கட்டுப்பாடுகளைநீக்கி, முற்போக்கு சிந்தனை உடைய நாடாக மாற்றும் முயற்சியை அந்நாட்டின் அரசர் சல்மான் எடுத்து வருகிறார்.

அதன்படி, சவூதி நாட்டின் கடற்கரை விடுதிகளில் பெண்கள் ‘பிகினி’ நீச்சல் உடை அணியவும், கார் ஓட்டவும் அந்நாட்டின் மன்னர் சல்மான் அனுமதி வழங்கியுள்ளார். இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள விளையாட்டு மைதானங்களுக்குள் பெண்கள் நுழைய மன்னர் சல்மான் அனுமதித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“2018ம் ஆண்டு, தொடக்கத்திலிருந்து குடும்பங்களுக்கு இடமளிக்க ரியாட், ஜெட்டா மற்றும் டாம்மன் ஆகிய இடங்களில் மூன்று விளையாட்டு அரங்கங்குகளை தயாரிக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது” என்று பொது விளையாட்டு ஆணையம் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

மேலும், கடந்த மாதம்ரியாத்தில், கால்பந்து போட்டி நடக்கும் ஒரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற, தேசிய நாள் கொண்டாட்டத்தில் முதல்முறையாக நூற்றுக்கணக்கான பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க