• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சவூதியில் இந்தியா குறித்து பேசிய டிரம்ப் !

May 22, 2017 தண்டோரா குழு

சவூதி அரேபியாவில் அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் இந்தியா குறித்தும் தீவிரவாதம் குறித்தும் பேசியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னுடைய முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை சவுதி அரேபியாவிலிருந்து துவக்கியுள்ளார். அங்கு நடைபெற்ற 50 முஸ்லிம் நாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாட்டில் தீவிரவாதம் குறித்து தனது முதல் உரையை நிகழ்த்தினார் டிரம்ப்.

அப்போது பேசிய அவர்,

தீவிரவாதம் என்பது நன்மைக்கும் தீமைக்குமான போர். இது மேற்கு உலக நாடுகளுக்கும் இஸ்லாத்துக்கும் இடையேயான பிரச்சனை அல்ல. குறிப்பாக, தீவிரவாதம் பலதரப்பட்ட நம்பிக்கைகளுக்கும் பிரிவுகளுக்கும் நாகரிகங்களுக்குமான போர் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாகரிகம் அறியாத மனிதர்கள், மனித உயிரை மதிக்காமல் நிகழ்த்தும் கொடுமைகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.

மேலும், இந்தியா தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடு என்று குறிப்பிட்டார்.உலகில் உள்ள எந்தவொரு நாடும், தங்கள் மண்ணில் தீவிரவாதத்தை வளரவிடக்கூடாது. ஒவ்வொரு நாடும் தங்கள் மண்ணில் தீவிரவாதத்தை வளரவிடவில்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றார்.

மேலும் படிக்க