• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

March 7, 2021 தண்டோரா குழு

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள ஆல் சோல்ஸ் சர்ச் 150-வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக அடிமைத்தனத்தில் இருந்து பெண்கள் விடுபடுவது என்னும் மைய கருத்தின் அடிப்படையில் இன்று காலை விழிப்புணர்வு பேரணி ஆல் சோல்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது.இந்த பேரணியை ஆல் சோல்ஸ் சர்ச் தலைவர் மற்றும் பாதிரி அருட்திரு சார்லஸ் சாம்ராஜ் ஆல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பெண்கள் ஐக்கிய சங்க தலைவர் லத்திகா சார்லஸ் கூறுகையில்,

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டும், 150-வது ஆண்டு விழாவை கொண்டாடும் கோயமுத்தூர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஆல் சோல்ஸ் தேவாலயம் சார்பில் பெண்களுக்கு சமூக அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவது குறித்து இப்பேரணி நடத்தப்பட்டது.

மேலும் பெண்களின் ஒற்றுமையை வலியுறுத்துவதற்கும் பெண்களின் சாதனைகளை கொண்டாடுவதற்கும் இச்சபையின் பெண்கள் ஐக்கிய சங்கம் ஊர்வலம் நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் பெண்களின் உரிமைகள், பெண்களின் அதிகாரம் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிலை படுத்தவும் இப்பேரணி நடைபெற்றது என்றார்.

மேலும் படிக்க