July 9, 2018
தண்டோரா குழு
சர்கார் போஸ்டர் தொடர்பாக நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸ் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சர்க்கார்’.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் ஜூன் 21ம் தேதி வெளியானது.அந்த போஸ்டர்களில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன.இந்த காட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இதனையடுத்து இந்த போஸ்டர்களை உடனடியாக இணையதளங்கள்,சமூக வலைதளங்கள் மற்றும் அனைத்து இடங்களிலும் இருந்து நீக்க வேண்டுமென்று பொது சுகாதாரத்துறை நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.சுகாதாரத் துறை அறிவுறுத்தலையடுத்து நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நீக்கியது.
இந்நிலையில் சர்கார் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்தியதற்கு ரூ.10 கோடியை அடையாறு புற்று நோய் மருத்துவ மையத்திற்கு இழப்பீடாக வழங்கக்கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கு மீதான விசாரணை இன்று நடைப்பெற்ற போது,நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸ் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.