• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்கார் படத்தில் விஜய் சொன்னதை விளம்பரப்படுத்திய தேர்தல் ஆணையம்

March 7, 2019 தண்டோரா குழு

சன் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் – விஜய் கூட்டணியில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.

இப்படத்தில் இலவசங்கள் வேண்டாம் உள்ளிட்ட சில காட்சிகள் அரசியல் கட்சியினரின் எதிர்ப்புக்குள்ளாகியது. எனினும் இப்படம் வசூல் ரீதியில் சாதனை படைத்தது. அதைபோல், மக்கள் வாக்களிப்பதன் அவசியத்தையும் இந்தப் படம் பேசியிருந்தது. இப்படத்தில் உங்கள் வாக்கை மற்றொருவர் பதிவு செய்து விட்டால் என்ன செய்வது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 49P பிரிவு குறித்து பேசப்பட்டது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் ஒரு விரல் புரட்சி என்ற 49P பிரபலமானது.

இந்நிலையில்,சர்கார் பட பாணியில் 49P பிரிவை விழிப்புணர்வு பிரச்சாரமாக முன்னெடுத்துள்ளது தேர்தல் ஆணையம். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உங்கள் வாக்கினை வேறு எவரும் பதிவு செய்துவிட்டால் கவலை வேண்டாம் 49P பிரிவை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து வாக்குச் சீட்டின் மூலம் வாக்களிக்கலாம் என்று விளம்பரப்படுத்தி வருகிறது. இதனை ஏ.ஆர் முருகதாசும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகர்ந்துள்ளார்.

அதைபோல், விஜய் ரசிகர்களும் இதனை சர்கார் படத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாக தங்களது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க