• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சம்பளப் பாக்கியைப் பெற்றுத்தரக் கோரி பெண்கள் மனு

February 27, 2017 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் அருகே தனியார் தொழிற்சாலையில் பணிபுரியம் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும், சம்பளப் பாக்கியைப் பெற்றுத்தரக் கோரியும் பாதிக்கப்பட்ட பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் புகார் மனு அளித்தனர்.

உக்கான் நகர் பகுதியில் வசித்து வரும் ராஜன் என்பவரின் மகள்களான பிராபா, பிரித்திகா, பிரின்சிகா ஆகிய மூவரும் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் டேரி டவல்ஸ் தொழிற்சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

அங்கு சுமார் 800க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு பணிபுரிந்து வருகிறார்கள். தொழிற்சாலையில் உள்ள பெண்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கித்தான் பணிபுரிய வேண்டும் என அந்த தொழிற்சாலை நிர்வாகம் வற்புறுத்தியுள்ளது. இதன் காரணமாக பிராபா, பிரித்திகா, பிரின்சிகா ஆகிய மூவரும் விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர்.

விடுதியில் முறையான சாப்பாடு இல்லாமல், அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர இல்லாத காரணத்தினால் அவர்கள் மூவரும் தொழிற்சாலை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், புகார் குறித்து எந்த நிர்வாகம் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன் அவர்களுக்குத் தரவேண்டிய சம்பளத்தையும் சரிவர தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.

இதன் காரணமாக அவர்கள் அங்கு தொடர்ந்து பணிபுரிய விருப்பமின்றி வெளியேறிவிட்டனர். அவர்களைப் போலவே பல பெண்களும் அடிப்படை வசதியில்லாமல் அங்கு தவித்து வருவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அதையடுத்து, அவர்கள் மூவருக்கும் வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்கக் கோரியும், தொழிற்சாலையில் பணிபுரியும் மற்ற பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் அவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தனர்.

மேலும் படிக்க