சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் ஆன் லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க கோரி கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மநீம கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், ஆன்லைன் தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காத ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மநீம கட்சி சார்பில் கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் அருகே மத்திய அரசை கண்டித்தும், ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மநீம கட்சியின் மாநில துணை தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமையல் எரிவாயும் விலை உயர்வால் மீண்டும் விறகு அடுப்பில் சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், ஆன் லைன் ரம்மியால் பல உயிர்கள் பரிபோவதாக தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பினர்.
மத்திய அரசின் மக்கள் விரோத போக்கால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மநீம தலைவர் உத்தரவின் படி வரும் நாட்களில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த உள்ளதாக அக்கட்சியில் மாநில துணை தலைவர் தங்கவேல் தெரிவித்தார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்