• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமூக வலைதளங்களில் தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய கோவை வாலிபர் கைது !

January 3, 2020 தண்டோரா குழு

தமிழக முதல்வர் பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய கோவை வாலிபரை குனியமுத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

கோவை கரும்புக்கடை சேரன் நகர் பகுதியை சேர்ந்த சேர்ந்த சிராஜுதீன் என்பவர் சமூக ஊடகம் மூலம் தமிழக முதல்வர்கள், மற்றும் அமைச்சர்களையும், மறைந்த முன்னால் முதல்வர்கள் எம்,ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களை ஆபாசமாகவும், தரக்குறைவான முறையிலும் செய்திகளை பரப்புவதாக வந்த தகவல்களை அடுத்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிராஜ்தீனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அவர் வேண்டுமென்றே அவதூறு பரப்பியது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் இளைஞரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சி கோவை மத்திய மண்டல செயலாளர் என்பது தெரியவந்தது. மேலும் இவரது முகநூல் பக்கத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஏராளமான பதிவுகள் செய்துள்ளதை போலீசார் உறுதிசெய்துள்ளனர். மேலும் கோவை சுந்திராபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் தகராறு செய்தது, மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் போத்தனூர் காவல் நிலையத்தில் உள்ளது என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சிராஜ்தீனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க