• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சமூக வலைதளங்களில் தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய கோவை வாலிபர் கைது !

January 3, 2020 தண்டோரா குழு

தமிழக முதல்வர் பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய கோவை வாலிபரை குனியமுத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

கோவை கரும்புக்கடை சேரன் நகர் பகுதியை சேர்ந்த சேர்ந்த சிராஜுதீன் என்பவர் சமூக ஊடகம் மூலம் தமிழக முதல்வர்கள், மற்றும் அமைச்சர்களையும், மறைந்த முன்னால் முதல்வர்கள் எம்,ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களை ஆபாசமாகவும், தரக்குறைவான முறையிலும் செய்திகளை பரப்புவதாக வந்த தகவல்களை அடுத்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிராஜ்தீனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அவர் வேண்டுமென்றே அவதூறு பரப்பியது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் இளைஞரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சி கோவை மத்திய மண்டல செயலாளர் என்பது தெரியவந்தது. மேலும் இவரது முகநூல் பக்கத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஏராளமான பதிவுகள் செய்துள்ளதை போலீசார் உறுதிசெய்துள்ளனர். மேலும் கோவை சுந்திராபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் தகராறு செய்தது, மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் போத்தனூர் காவல் நிலையத்தில் உள்ளது என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சிராஜ்தீனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க