• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

March 23, 2017 தண்டோரா குழு

தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் மீது வியாழக்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு முதலமைச்சராக ஒ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் அவர் ராஜினாமா செய்ய எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிப்ரவரி 18- ம் தேதி தமிழக சட்டபேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. அப்போது ஓட்டெடுப்பை ரகசிய முறையில் நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் ரகளை ஏற்பட்டது. இதன் காரணமாக தி.மு.க உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அதன் பிறகு நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் 122 உறுப்பினர்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சபாநாயகர் தனபால் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக தி.மு.க.,காங்கிரஸ்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் கூறினர். இதன் காரணமாக சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் சபாநாயகரை நீக்க கோரும் கடிதத்தை, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 9-ம் தேதி சட்டப்பேரவையில் அளித்தார்.

இந்நிலையில், சபாநாயகர் தனபால் மீது, தி.மு.க. சார்பில் கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதம் வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன் பின் ஓட்டெடுப்பு நடத்தப்படும்.

நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை நடத்துவார். சபாநாயகர் தனபால் கிழே அமர்ந்திருப்பார்.

மேலும் படிக்க