• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சபரிமலையில் இன்று முதல் 144 தடை உத்தரவு !

November 3, 2018 தண்டோரா குழு

சபரிமலை அய்யப்பன் கோவில் சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகளுக்காக வரும் 5ம் தேதி மாலை நடை திறக்கவுள்ள நிலையில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் சபரிமலையில் உலகப்புகழ்பெற்ற ஐய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. குறிப்பாக கேரளாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.இந்த பரபரப்பான சூழ்நிலையில்,ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது கோயிலுக்குள் செல்வதற்கு பெண்கள் வந்தனர். ஆனால், பக்தர்கள் மற்றும் சன்பரிவார் அமைப்புகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில், சபரிமலை ஐய்யப்பன் கோவில் சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகளுக்காக வரும் 5ம் தேதி மாலை நடைதிறக்கவுள்ளது. மேலும் 6ம் தேதி தீபாவளியன்று மட்டும் ஐய்யப்பன் கோவில் நடை திறந்திருக்கும். அன்று இரவு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சுமார் 10 மணியளவில் கோயில் நடை அடைக்கப்படும்.

இதற்கிடையில், பெண்கள் வருகையை கண்டித்து பக்தர்கள் மற்றும் இந்து சன்பரிவார் அமைப்புகள் போராட்டம் நடத்த கூடும் என பம்பை, நிலக்கல், பத்தினம்திட்டா பகுதிகளில் போலீஸார் தங்களது பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர். மேலும், அப்பகுதியில் எந்த அமைப்புகளும் கூடாத வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் எந்த அமைப்பை சேர்ந்தவர்களும் கூடுவதை எளிதில் தடுத்துவிட முடியும்.போலீசார் கட்டுபாட்டில் சபரிமலை இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க