• Download mobile app
19 Apr 2026, SundayEdition - 3721
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டாக பிளக்க வேண்டும் – மலையாள நடிகர் ஆவேசம்

October 12, 2018

சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டாக பிளக்க வேண்டும் என மலையாள நடிகர் கொல்லம் துளசி ஆவேசமாக பேசியுள்ளார்.

10வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதி வழங்கக்கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது. இதனால்,உச்சநிதிமன்ற தீர்ப்புக்கு பல்வேறு அமைப்புகளும் முக்கியப பிரமுகர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகிறது. எனினும், கேரள அரசு சபரி மலைக்கு வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து, வரும் 18ஆம் தேதி முதல் பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர்.

இதற்கிடையில், கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மலையாள நடிகர் கொல்லம் துளசி,
சபரிமலை கோவிலுக்கு வரும் பெண்களை வெட்டி ஒரு பாதியை டெல்லிக்கும் இன்னொரு பாதியை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் அலுவலகத்திற்கு வீச வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார்.

இந்நிலையில், மலையாள நடிகர் கொல்லம் துளசியின் இந்த பேச்சுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க