September 9, 2019 தண்டோரா குழு
சந்திராயன் விண்கலம் வெற்றி பெற வேண்டி கோவையில் மஹா யாகம் நடைபெற்றது.
இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது.கடந்த 2-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது.மேலும் விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் மிகவும் மெதுவாக கடந்த7 ஆம் தேதி தரையில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்து இருந்த நிலையில் சிறிய பழுது ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்த சந்திராயன் விண்கலம் தரை இறக்கப்பட்டு ஆய்வு செய்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆர்எஸ்எஸ் தலைமையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள அலங்கார மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ காலபைரவர் முன்பு மஹா யாக பூஜை நடைபெற்றது.
இந்த பூஜையில் ஆர்எஸ்எஸ் மகேஷ் ,சிவஜோதி, சிவமுத்து மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.