• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சத்தீஸ்கர் மாகாணத்தில் நடந்த பிரமாண்ட மலர்க்கண்காட்சி

August 15, 2017 தண்டோரா குழு

சத்தீஸ்கர் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பூக்கள் மற்றும் காய்கறிகள் கண்காட்சியை மக்கள் கண்டு ரசித்தனர்.

சத்தீஸ்கர் மாகாணத்தின் பிலாய் நகரிலுள்ள மைத்ரி பாக் என்னும் இடத்தில் பூக்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு, பலவிதமாக அலங்காரங்கள் செய்யப்பட்ட கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சத்தீஸ்கர் மாகாணத்தின் பல்வேறு இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து, அதை கண்டு களித்தனர்.

அதில் Black Lady Rose, Dutch Rose, Kashmir Rose உள்ளிட்ட சுமார் 300 வகையான ரோஜா மலர்கள் இடம்பெற்றன. அந்த ரோஜாக்களை குறித்தும் அதன் பராமரிப்பு நுட்பம் குறித்து தோட்டக்கலை ஆய்வார்கள் கேட்டறிந்தனர். சிலர் அந்த ரோஜா மலர்களை வாங்கி சென்றனர்.

அங்கு நடந்த பூச்செண்டு தயாரித்தல் மற்றும் சாலட் அலங்காரம் போட்டியில், மக்கள் தங்களுடைய படைப்பு திறன்களை காட்டினர். பெண் குழந்தையை காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில் 3டி மூலம் போடப்பட்டிருந்த அழகிய கோலங்கள் அங்கு வந்திருந்த மக்களின் கவனத்தை கவர்ந்தது.

“அந்த மலர்கள் மிகவும் அழகாக வைக்கப்பட்டும் நன்கு பராமரிக்கப்பட்டும் இருந்தது. இது போன்ற அரிய வகை பூக்களை தினமும் பார்க்க இயலாது. பூக்களை கொண்டு செய்யப்பட்டிருந்த பறவை வடிவம் கண்கவர் காட்சியாக இருந்தது. இந்த அலங்காரங்களை கிடைத்த தகவல்கள் மிகவும் உதவியாக இருந்தது” என்று அங்கு வந்திருந்த பெண்மணி தெரிவித்தார்.

“இது போன்ற அற்புதமான கோலங்களை முதல் முறையாக பார்த்தேன். 3டி நுட்பத்தை பயன்படுத்தி போடப்பட்டிருந்த கோலங்கள், ஒரு கலைஞரின் கடின உழைப்பை காட்டுகிறது” என்று அங்கு வந்திருந்த மற்றொரு பெண் தெரிவித்தார்.

மேலும் படிக்க