• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சத்தீஸ்கரில் நோயை குணமாக்கும் மந்திரவாள்?

June 1, 2017 தண்டோரா குழு

மனித உடலில் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் குணமாக்கும் சக்தி தன்னிடம் உண்டு என்றும் தன்னை இந்தியாவின் மந்திரவாதி என்றும் ஒரு பெண் கூறிக்கொண்டு வருகிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் கோரியா என்னும் இடத்தில் பழங்குடி பெண் புலேஷ்வரி தேவி(45) வசித்து வருகிறார். இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் தன்னிடம் இருப்பதாகவும், தன்னிடமுள்ள மந்திர வாளால், மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்து வியாதிகளையும் குணமாக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார். இதனால், கோரியா பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களுடைய நோய் குணமாகும் என்று அவரிடம் செல்கின்றனர்.

வலி நிவாரணம், உடைந்த எலும்புகள் மற்றும் குழந்தையின்மை ஆகிய உபாதைகளுக்கு தீர்வு காண பல இடங்களிலிருந்து மக்கள் வருகின்றனர்.கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளூர் மக்கள் இந்த மூடநம்பிக்கை பின்பற்றி வருகின்றனர்.

ராமதேவி(27) என்பவர் தனது கண்ணில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவரிடம் சென்றுள்ளார். அவருடைய கண்களில் வாள்கள் சொருகப்பட்டு, அவருக்கு அளித்த சிகிச்சையின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அவர் கூறுகையில், “என்னுடைய கண்ணில் பிரச்சனை உண்டு. கடந்த 3 ஆண்டுகளாக புலேஷ்வரி தேவியை சந்தித்து வருகிறேன்.வாளை பயன்படுத்தி செய்யும் சிகிச்சைக்கு பிறகு முன்பிருந்ததை விட என்னுடைய கண்ணில் பிரச்சனைகள் குறைந்திருக்கிறது.என்று கூறினார்.

ராம் பிரசாத்(33) என்னும் உள்ளூர் வாசி கூறுகையில்,

“உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் புலேஷ்வரி தேவி குணப்படுத்துவாள். அவளால் குணப்படுத்த முடியாதது ஒன்றுமில்லை” என்று கூறினார்.

மேலும் படிக்க