• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டவிரோத மணல் திருட்டு..!நடவடிக்கை எடுக்க விவசாய சங்கத்தினர் கோரிக்கை.

January 10, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பேரூர் வட்டத்தில் வெள்ளிமலை பட்டணம் கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் எடுப்பது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பேரூர் வருவாய் ஆய்வாளர் தங்கள் அமைப்பு நிர்வாகிகளை மிரட்டுவதாகதமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் சு. பழனிச்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கோவை மாவட்டம் பேரூர் வட்டத்தில் வெள்ளிமலை பட்டணம் கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் எடுப்பது குறித்து பலமுறை புகார் அளித்தும் வருவாய் ஆய்வாளர் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த பிரச்சனை குறித்து, பேரூர் வட்டாட்சியரிடம் முறையிட்ட போது அவர் ஆய்வு செய்து மணல் திருட்டில் ஈடுப்பட்ட வண்டிகளை அப்புறப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டார்.

தொடர்ந்து பழி வாங்கும் நோக்கோடு செயல்படும் பேரூர் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், மணல் லாரி உரிமையாளர்களை கொண்டு மிரட்டி வருகின்றனர். எனவே,இவ்வாறு செயல்படும் கிராம நிர்வாக அலுவலர் மீதும் வருவாய் ஆய்வாளர் மீது மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்”, என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க