November 28, 2021
தண்டோரா குழு
கோவை தடாகம், பகுதியில் செங்கல் சூளைகளில் மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மாங்கரை அடுத்த தைல மர பேருந்து நிறுத்தம் அருகே தனியார் செங்கல் சூளை (RSV chamber) ஒன்றில் சட்டவிரோதமாக செங்கற்களை கடத்துவதாக தடாகம் காவல்நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு சென்றது.
அப்போது லாரி(TN38CM 6280) ஒன்றில் செங்கல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியின் ஓட்டுநர் தப்பி செல்ல லாரி மட்டும் பறிமுதல் செய்யப்பட்டு தடாகம் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த தடாகம் காவல்துறையினர் ஓட்டுநர் மற்றும் செங்கல் சூளை உரிமையாளரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.