• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுக டெபாசிட் இழக்கும் – பையா ஆர் கிருஷ்ணன்

March 13, 2021 தண்டோரா குழு

வரும் சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுக டெபாசிட் இழக்கும் என கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் பையா ஆர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையம் வந்த அவருக்கு தி.மு.க.கட்சியினர் திரளாக வந்து வாழ்த்து தெரிவித்து,சிறப்பான வரவேற்பு அளித்தனர்.,

தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

கொங்கு மண்டலத்தில் அதிமுக டெபாசிட் இழக்கும்,எனவும் அனைத்து தொகுதிகளும் திமுக வசமாகும், என தெரிவித்த அவர், கவுண்டம்பாளையம் தொகுதியில் வெற்றி பெற்று தலைவருக்கு வெற்றிக்கனி அளிக்க உள்ளேன், தமிழகத்தில் திமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறினார் இந்த நிகழ்ச்சிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டார்.

மேலும் படிக்க