• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளியேற்றம்

March 20, 2018 தண்டோரா குழு

வி.எச்.பி ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் அமளியில் ஈடுபட்டதால் திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் தமிழகத்தில் வி.எச்.பி. ரத யாத்திரைக்கு கண்டனம் தெரிவித்து ரத யாத்திரைக்கு எதிராக திமுக  சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.

மேலும், ரத யாத்திரை குறித்து டிஜிபி விளக்கம் அளிக்க வேண்டும் என   வலியுறுத்தியுள்ள ஸ்டாலின் இது அதிமுக ஆட்சியா? அல்லது பாஜக ஆட்சியா? விமர்சனம் செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி இது தொடர்பாக விளக்கமளித்தார். ரத யாத்திரை விவகாரத்தில் முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுத்து திமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.  ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் முழக்கம் எழுப்பியதால் திமுகவினர் வெளியேற்றப்பட்டனர். பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து தலைமைச்செயலகத்துக்கு வெளியே திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டனர்.

அவையை நடத்த ஒத்துழைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க நேரிடும்: சபாநாயகர் எச்சரிக்கை

மேலும் படிக்க