• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு .

June 21, 2017 தண்டோரா குழு

திமுக அளித்த புகார் சம்பந்தமாக ஆளுநரிடம் இருந்து வந்துள்ள கடிதத்தை படித்து காட்ட சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனை கண்டித்து வெளிநடப்பு செய்தோம் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“திமுக அளித்த புகார் அடிப்படையில் ஆளுநர் சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆளுநரிடம் இருந்து சட்டப்பேரவைக்கு வரும் தகவல்களை படித்து காட்ட வேண்டும் என்பது சட்டம். இக்கடிதம் குறித்து சபாநாயகர், முதலமைச்சர் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும். ஆளுநரிடம் இருந்து வந்துள்ள கடிதத்தை படித்து காட்ட சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.”என்றார்.

முன்னதாக கூவத்தூர் பேரம் விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோ ஆதரங்களை எதிர்க்கட்சித் தலைவர் மு.க ல்டாலின், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க