• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்வதற்காக நீதிமன்றத்தை நாட ரணில் விக்ரமசிங்கேவின் கட்சி முடிவு!

November 10, 2018 தண்டோரா குழு

ரணில் விக்ரமசிங்கேவின், ஐக்கிய தேசிய கட்சி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தீர்மானித்துள்ளது.

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு,புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியில் ராஜபக்சே ஈடுபட்டார். எனினும், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தினால் ராஜபக்சே தோற்பது உறுதி ஆனது. இதனால் தனக்கு நெருக்கமானவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்த அதிபர் சிறிசேனா, திடீரென்று பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக இன்று, ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது,

அதில் ,அரசியல் சாசனத்தை பாதுகாக்க வலியுறுத்தி, சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்வதற்காக நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வாதிகார ஆட்சியை இலங்கை அதிபர் நடத்தி வருவதாகவும், அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மேலும் படிக்க