• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகலா தலைமையிலானவர்கள் தான் உண்மையான அ.தி.மு.க – சு.சாமி

August 12, 2017 தண்டோரா குழு

சசிகலா தலைமையிலானவர்கள் தான் உண்மையான அ.தி.மு.க என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

காங்கிரஸ்காரர்கள் தான் ஊழல் செய்து சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். சிதம்பரம், அவரது மகன் கார்த்தி விரைவில் சிறைக்கு செல்வார்கள்.காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சிறையில் தான் நடைபெறும் என்றார்.

அப்போது அதிமுக அணிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது,

சசிகலா தலைமையிலானவர்கள் தான் உண்மையான அ.தி.மு.க. அதிமுகவுக்கு தலைமை சசிகலாதான்.அதிமுக கட்சி விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தவறு செய்து விட்டது.இது தொடர்பான விஷயத்தில் சில நிமிடங்களில் எடுக்க வேண்டிய முடிவை வாதாடி பெற சரியான ஆள் இல்லை என்றார்.

மேலும், திமுக துணிச்சல் இருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரட்டும் என்றும் தற்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை என்றார்.

மேலும் படிக்க